ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் கூறும் ரகசியம்!

0

அகஸ்தியர் கூறும் ரகசியம்
உண்ணும் போது உயிரெழுத்தை உயர வாங்கி
உறங்கும் போதெல்லாம் அதுவேயாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும்போதெல்லாம்
பேணியே வளம் நோக்கி அவத்தில் நில்லு
தின்னும் காயிலை மருந்துஉண்ணும் – —————போதெல்லாம் தினமும் இப்படி செய்ய
வல்லார் மண்ணூழி காலம் மட்டும்
வாழ்வார் பாரு மறலி கையில் – அகப்படமாட்டார்தானே . –
பொருள் =
***********
தினமும் சாப்பிடும்போது உயிரெழுத்தா கிய அ காரம் அதாவது சூரியகலையாகிய வலது பக்கம் சுவாசம் நடக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
உறங்கும் போதெல்லாம் – அதாவது தூங்கும் போது இடது கை பக்கம் ஒருக்களித்து படுத்தால் வலது பக்கம் சூரிய கலையில் சுவாசம் நடை பெரும் ஆயுள் அதிகமாகும் .
பெண்ணிடம் உடலுறவு கொண்டு விந்துவை வெளியிடும் போது சூரிய கலையில் அதாவது வலது பக்கம் சுவாசம் நடை பெறும்போது உங்கள் கவனத்தை உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் கவனத்தை வைத்து செய்யவேண்டும் . இதனால் விந்து அதிகமாக வெளியேறாது.

உணவு, மருந்து , சாப்பிடும் போதும் சூரியகலையாகிய வலது பக்கம் சுவாசம் நடக்கும் போது மட்டும் சாப்பிட்டு தினமும் மேல்கண்ட முறைகளை கடைபிடிப்பவர்கள் ஆண், பெண் அனைவரும்,இந்த உலகம் உள்ளவரை வாழ்வார்கள் மறலி ( எமன் ) கையில் மாட்டமார்கள் சாக மாட்டார்கள் .– இது அகத்திய முனிவர் அப்பாவி தமிழ் மக்களுக்கு சொல்லும் ரகசியம் ..




——– சித்தர்கள் ரகசியம் ஆரோக்கியமாக வாழ ———-
நாள் இருமுறை ????????????
வாரம் இருமுறை ?????????????
மாதம் இருமுறை ????????????????
வருடம் இருமுறை ??????????????????
( நாள் இருமுறை ) — காலை மாலை மலம் சரியாக போகவேண்டும் —
( வாரம் இருமுறை ) – ஆண்கள் புதன், சனிக்கிழமை — பெண்கள் செவ்வாய் , வெள்ளிகிழமை, தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்—
( மாதம் இருமுறை ) 15 நாட்களுக்கு ஒரு முறை உடல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்,
( வருடம் இருமுறை ) 6 மாதத்திற்கு 1 முறை பேதிக்கு மருந்து சாப்பிட்டு வயிற்றை ( குடலை ) சுத்தம் செய்ய வேண்டும்..

மேற்படி கடை பிடிக்கும் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு நோய்கள் எதுவுமில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் ,
100 ஆண்டுகள் வாழும் ரகசியம்
***********************************
🏆அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்
🏆முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்
🏆 மண்பானைச் சமையலை உண்பவன்
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்
🏆 கவலைப்படாத மனிதன்
🏆 நாவடக்கம் உடையவன்
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !